புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு விமானப்படை முகாம் விமான ஓடுபாதையினை ஜனாதிபதி திறந்து வைத்தார்

புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு விமானப்படை முகாம் விமான ஓடுபாதை மற்றும் பயணிகள் இறங்குதுறை ஆகியன இன்று (10) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.


நவீனமயப்படுத்தப்பட்ட விமான ஓடுபாதையில் வந்திறங்கிய முதலாவது விமானத்தில் ஜனாதிபதி அவர்கள் பிரயாணம் செய்தமை விசேட நிகழ்வாகும்.


இதன் போது ஜனாதிபதி அவர்களுக்கு விமானப்படை அணிவகுப்பு மரியாதை கிடைக்கப்பெற்றதுடன் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன புலத்சிங்களவினால் ஜனாதிபதி அவர்கள வரவேற்கப்பட்டார்.


நவீனமயப்படுத்தப்பட்ட விமான ஓடுபாதையின் நினைவுப் பதாகை ஜனாதிபதி அவர்களின் கரங்களினால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.


புதிய விமான ஓடுபாதை 1560 மீற்றர் தூரத்தைக் கொண்டதுடன் நடுத்தர அளவு விமானங்களுக்குரிய வசதிகளைக் கொண்டதாக இது நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.


அமைச்சர் தயா கமகே, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பிரதி அமைச்சர் அமீர் அலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண ஆளுனர் ஓஸ்ரின் பெர்ணாந்து, கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட மாகாண அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன புலத்சிங்கள,பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com