அன்று ஊடகவியலாளர் இன்று உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் நாளை ? வவுனியாவில் இடண்டாம் தரப் பிரஜைகளாகும் தமிழர்கள்..!

அண்மைக்காலமாக வவுனியாவில் விரும்பத்தகாத பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது . கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் வவுனியா தர்மலிங்கம் வீதியில் வைத்து தமிழ் ஊடகவியலாளர் ஒருவருவர் மீது வியாபார நிலைய பணியாளர்களால்[இஸ்லாமிய ] தாக்குதல் நடத்தப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டமை அறிந்ததே.



தொடர்ந்து நேற்றைய தினம் வவுனியா மாவட்ட உதை பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரான தேவா என அழைக்கப்படும் ஜோன்சன் மீது முஸ்லிம் அமைச்சர் ஒருவரது நெருங்கிய சகாக்களால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையிடம் முறையிடச் சென்றபோது காவல்துறை தாக்கியவர்களுக்கு சாதகமாக நடந்துகொண்டுள்ளது. இதுவரை முறைப்பாடு எதனையும் பதிவு செய்யவும் இழுத்தடித்து வருகின்றது.



வவுனியாவில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கான உறவு என்பது நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடாமல் பாதுகாப்பது சமூக பொறுப்புள்ள அனைவரதும் கடமையாகும்.



அடிப்படையில் முஸ்லிம் சமுகம் தமக்கிருக்கின்ற ஆளுமையான அரசியல் பலத்தை கொண்டு தமிழர்களை இரண்டாம்தர பிரஜைகளாக நடத்த முனைவதும் தமிழ் அரசியல் தலைமைகள் அசமந்தப் போக்குடன் இருப்பதும் இரண்டு  இனங்களுக்குமான சமநிலையை குறைப்பதனாலேயே இவ்வாறான தான்தோன்றித் தனமான சம்பவங்கள் நடந்து வருகின்றது .

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com