
‘தெறி’ படத்தின் படப்பிடிப்பின்போதே இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் உருவாகும் என்று இயக்குனர் அட்லி கூறியிருந்த நிலையில் தற்போது இந்த படம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
பரதன் இயக்கி வரும் ‘விஜய் 60’ படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய்-அட்லி இணையவுள்ளதாகவும், இந்த படத்தை சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு அஜித் நடித்த ‘அசல்’ படத்திற்கு பின்னர் கடந்த ஆறு வருடங்களாக சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் வேறு படங்களை தயாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment