பிறந்த குழந்தையை கொலை செய்த குற்றசாட்டின் பேரில் பெற்றோர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெற்றோர் குழந்தையை கொன்று மிகவும் இரகசியமான முறையில் புதைத்துள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவர்கள் கொச்சிக்கடையில் உள்ள அத்கல பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் 5குழந்தைகளின் பெற்றோர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்இ நீர்கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் குழந்தையின் உடல் தோன்றி எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிகாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளன
0 comments:
Post a Comment