`விளையாடப் போன என் தம்பி மாலத்தீவு சிறையிலிருந்தான்'

cghjghjஇலங்கையின் வட குதியில் உள்ள வவுனியா முத்தையன்கட்டு மற்றும் புளியம்பொக்கணை  ஆகிய இடங்களிலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற்போனதாக தெரிவிக்கப்படும் 3 இளைஞர்கள் மாலத்தீவுகளிலிருந்து கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



தனது இளைய சகோதரன் 2005 இல் வீட்டைவிட்டு வெளியே விளையாடச் சென்றிருந்த போது காணாமல் போயிருந்ததாகவும் சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகளின் பின்னர் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் மாலத்தீவு சிறை ஒன்றில் உள்ளதாக கூறியதாகவும் அவர்களை நேரில் சென்று பார்த்துவிட்டு திரும்பிய கௌரிராஜா கவிதா  தெரிவித்தார்.



தனது சகோதரன் உட்பட 3 இளைஞர்களும் மாலத்தீவு சிறையிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார்.



கணேஸ் இராமச்சந்திரன், நவரத்தினராசா ரஞ்சித், முத்துலிங்கம் யோகராஜா ஆகிய மூவரும் மாலத்தீவுகள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளமைக்கான காரணங்கள் தெளிவில்லாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



bbc

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com