பெண் பிள்ளைகளை கரைசேர்க்க வேண்டுமே என்ற ஏக்கமும் கவலையும் தற்போது பெற்றோரைப் பாடாய்ப்படுத்துகின்றது. தற்போதைய சூழலில் மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் சீரை தானமாகக் கொடுத்தால்தான் திருமணம். அரசாங்க வேலை பார்க்கும் மாப்பிள்ளை என்றால் அவருக்கு ஒரு தொகை, வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் அவருக்கு ஒரு சீதனம், கூலி வேலை செய்பவர் என்றால் அவருக்கு ஒரு சீதனம்;
என தரகர் கையில் ஒரு பெரிய பட்டியலே இருக்கும். பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறதே என்பதைச் சிந்திக்காமல் சீதனம் வாங்குவதும் கொடுப்பதும் கலாசாரம் என நமது சமூகம் தவறான எண்ணத்தை வளர்த்துள்ளது. மகனுக்கு அதிகமா சீதனம் வாங்கினால்தான் மதிப்பு என்று பலரும், பெண்ணுக்கு நிறைய சீதனம் கொடுத்தால்தான் மாப்பிள்ளை வீட்டில் கௌரவம் என்று சில பெற்றோரும் நினைக்கின்றனர்.
மனைவி கொண்டுவரும் சொத்துக்களை எதிர்பார்த்து வாழ்பவர்கள் என்று ஒட்டுமொத்த ஆண்களையும் சொல்லிவிட முடியாது. தனது மனைவியையே பெரிய சொத்தாக நினைக்கும் ஆண்களும் உண்டு.
0 comments:
Post a Comment