பிரதேச செயலரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கோரி வேலணை மக்கள் ஆர்ப்பாட்டம்!

vjhvவேலணை பிரதேச செயலரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கோரி வேலணை மக்கள் இன்றைய தினம் காலை யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

 


யாழ்.பிரதேச செயலராக கடமையாற்றிய திருமதி சுகுனரதி தெய்வேந்திரம் நேற்றைய தினம் இடமாற்றம் செய்யப்பட்டு வேலணை பிரதேச செயலராக நியமிக்கப்பட்டிருந்தார்.



இந்நிலையில் வேலணை பிரதேச செயலராக கடமையாற்றிய மஞ்சுளாதேவி வேறு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்படவிருக்கும் நிலையில், தமது பிரதேச செயலர் மஞ்சுளா தேவியை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



வேலணை பிரதேச செயலகத்தின் எல்லைக்குட்பட்ட பொது அமைப்புகள், மகளிர் அமைப்புக்கள், பொது மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தார்கள்.



இதன்போது தமது பிரதேச செயலர் தமது பகுதி மக்களின் மேம்பாட்டுக்கு அளப்பரிய பணிகளை ஆற்றியதாக கூறும் மக்கள் தமக்கு புதிய பிரதேச செயலர் வேண்டாம் எனவும் கூறியுள்ளதுடன், யாழ்.மாவட்டச் செயலர் என்.வேதநாயகனுக்கு மகஜர் ஒன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.



About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com