
மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட 65 ஆயிரம்
வீடுகளுக்கான விண்ணப்பப்படிவத்தை கையளிப்பதற்காக வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலாளரின் கையொப்பத்தை பெறுவதற்காக பொதுமக்கள் இன்று(30.03.2016) காலையில் இருந்தே முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் பிரதேச செயலகம் மக்கள் கூட்டத்தினால் நிறைந்து காணப்படுகின்றது.
இந்த நிலையில் விண்ணப்பப்படிவத்தில் பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபரிடம் கையொப்பத்தை பெறுவதற்காக ஆயிரக்கணக்கானோர் தினமும் வவுனியா பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகத்திற்கு அதிகளவான மக்கள் செல்கின்றனர்.
இதன்காரணமாக மக்களைக் கட்டுப்படுத்த முடியாத அரச உத்தியோகத்தர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் விண்ணப்பத் திகதி முடிவடையவுள்ளதனால் மக்களின் நலன்கருதி கடமையை செய்வதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
About the Author
unmainews.com
Author & Editor
Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.
0 comments:
Post a Comment