சிதம்பரம் பள்ளியில் பிளஸ்டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை

gkghkgசிதம்பரம் அரசு பள்ளியில் பிளஸ்டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எல்லப்பன்.


 இவரது மகள்கள் அக்க்ஷயா (17) பிளஸ்டூ வகுப்பும், அகிலா (14) 9-ம் வகுப்பும் ஆகிய இருவரும் சிதம்பரம் நந்தனார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.


பிளஸ்டூ தேர்வு நடைபெற்று வரும் வேளையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கணிதத்தேர்வு சரியாக எழுதாததால், பெயிலாகி விடுவோம் என மனமுடைந்த அக்க்ஷயா சனிக்கிழமை பிற்பகல் பள்ளி வளாகத்தில் தேர்வு எழுதும் அறையில் பேனில் சுடிதார் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸார் சம்பவ இடத்திற்கு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com