
இதற்கமைய கோட்டாபய ராஜபக்சவை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி முன்னிலையாகுமாறு விசேட நீதிமன்ற நீதவான் ஐராங்கனி பெரேரா அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை இலக்குவைத்து கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பு - கொள்ளுப்பிட்டி, பித்தல சந்தியில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததது. இதில் அவர் மயிரிழையில் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையில் கோட்டாபய ராஜபக்சவின் சாட்சியங்களைப் பதிவுசெய்துகொள்ளும் பொருட்டு அவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
0 comments:
Post a Comment