நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் மோச­டிகள்;அநுர திஸா­நா­யக்க எம்.பி

tioyuouசிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு மீள்­கு­டி­யேற்றம் புனர்­வாழ்வு மற்றும் இந்து சமய  அலு­வல்கள் அமைச்சின் கட்­டட கேள்வி மனுக் கோரலின் போதும் வடக்கில் 65 ஆயிரம் வீட­மைக்கும் திட்­ட த்தின் போதும் பாரிய ஊழல் மோசடி இடம்



பெற்­றி­ருப்­ப­தாக எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டாவும் ஜே.வி.பியின் தலை­வ­ரு­மான அநுர திஸா­நா­யக்க எம்.பி. சபையில் தெரி­வித்தார்.



நேற்று வியா­ழக்­கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23/2 இன் கீழ் கேள்வி எழுப்­பிய போதே அவர் மேற்­கண்­ட­வாறு சந்­தேகம் வெளி­யிட்டார்.



அவர் சபையில் கேள்­வி­யெ­ழுப்பி மேலும் கூறு­கையில்,



கடந்­த­கால ஆட்­சி­யா­ளர்கள் மோச­டி­களில் ஈடு­ப­டு­வ­தா­கவும் நிதியை பாரி­ய­ளவில் வீண்­வி­ரயம் செய்து சூறை­யா­டு­வ­தா­கவும் குற்றம் சாட்டி மக்­க­ளிடம் ஆணை கோரி­னார்கள். அந்தக் கோரிக்­கைக்கு மக்கள் ஆணை வழங்கி நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­னார்கள். ஆனால் நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் மோச­டிகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. மீள்­கு­டி­யேற்ற புனர்­வாழ்வு அமைச்சின் கட்­ட­டத்­திற்­காக 35 ஆயிரம் அடி பரப்­ப­ள­வான கேள்வி மனுக்­கோரல் 2015 செம்­டெம்பர் 15ஆம் திகதி கோரப்­பட்­டது. மூன்று நபர்­களின் விலை மனுக்கள் பரி­சீ­ல­னைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டன. எனினும் மாத­மொன்­றுக்கு 30 இலட்சம் வரை தொகை மதிப்­பி­டப்­பட்­டி­ருந்த விலை­ம­னு­தா­ர­ருக்கு அக்­கேள்­விப்­பத்­திர அனு­மதி வழங்­கப்­பட்­டது. பின்னர் மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­பட்டு குறித்த கட்­ட­டத்­திற்­காக மாத­மொன்­றுக்கு 42 இலட்சம் ரூபா வழங்­கப்­ப­டு­கின்­றது.



எவ்­வாறு ஏனைய கேள்­விப்­பத்­திர மனு­தா­ரர்­களை நிரா­க­ரித்து குறித்த மனு­தா­ர­ரு­ககு எவ்­வாறு அனு­ம­தி­வ­ழங்­கப்­பட்­டது.


மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­படும் போது எவ்­வாறு தொகை அதி­க­ரிக்க முடியும்? அவ்­வாறு அதி­க­ரிக்கும் போது எவ்­வாறு அந்த மனு­தா­ர­ருக்கு வழங்­க­மு­டியும். குறித்த கட்­ட­டத்தில் வாக­னத்­த­ரிப்­பி­ட­வ­சதி, மின்­தூக்கி, உள்­ளிட்ட வச­திகள் காணப்­ப­டு­வ­தாக காரணம் கூறப்­பட்­டாலும் கோரப்­பட்­ட­தற்­கி­ணங்க முழு­மை­யான அளவு இடப்­பி­ர­மாணம் காணப்­ப­டு­கின்­றதா என்றால் இல்லை. 35 ஆயிரம் அடி­யிலும் குறை­வான இட­வ­ச­தியே காணப்­ப­டு­கின்­றது. மேலும் திறந்­த­வொரு கேள்வி மனுக்­கோ­ரலை ஏன் செய்­ய­வில்லை என்­பதும் ஐயப்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.



அடுத்­த­தாக வடக்கில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற 65 ஆயிரம் வீட்­டுத்­திட்­டத்தில் மோச­டிகள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. வடக்கில் இந்த அர­சாங்­கத்தின் 50 ஆயிரம் வீட்­டுத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இத்­திட்­டத்தில் ஒரு வீட்­டுக்கு 5 இலட்­சத்து 50 ஆயிரம் செல­வி­டப்­ப­டு­கி­றது. அதே போன்று ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் வீட்­டுத்­திட்டம் 6 இலட்­சத்து 50 ஆயிரம் ரூபாவில் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றி­ருக்­கையில் குறித்த நவீன வீட்டுத் திட்­ட­மாக கூறப்­படும் 65 ஆயிரம் வீட்­டுத்­திட்­டத்தில் வீடொன்­றுக்கு 12 இலட்சம் ரூபா­வாக செல­வாகும் என மதிப்­பீடு செய்­யப்­பட்­டது.



ஆனால் தற்­போது அந்த வீடொன்­றுக்­கான செல­வீனம் 21 இலட்சம் ரூபா­வாக கணிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு பாரி­ய­தொரு அதி­க­ரிப்பு திடீ­ரென ஏற்­ப­டு­வ­தற்­கான காரணம் என்ன? தொழி­நுட்ப ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்தால் அந்த அறிக்­கையை வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.



அத்­துடன் அண்­மைக்­கா­ல­மாக இச்­செ­யற்­திட்­டத்­துடன் தொடர்புடைய அமைச்சின் ஊழியர்கள் இடமாற்றப்படுவதாகவும் கூறப்படுகின்றது. எனவே குறித்த வீட்டுத் திட்டத்திலும் அமைச்சின் கட்டடத்திற்கான கேள்வி மனுக்கோரலிலும் பாரிய மோசடிகள் இடம்பெற்றிருப்பதாகவே கருத முடிகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒரு போதும் நாம் இடமளிக்கப்போவதில்லை. இதன் உண்மையான நிலைமையை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com