நித்திரைக்குச் சென்ற குடும்பப் பெண் சடலமாக மீட்பு!

images (15)இரவு நித்திரைக்குச் சென்ற குடும்பப் பெண்ணொருவர் காலையில் சடலமாக  மீட்கப்பட்ட சம்பவமொன்று மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

 

புதிய காத்தான்குடி - 03, சென்றல் வீதி, இரண்டாம் ஒழுங்கையில் வசித்து வந்த நயிமா (வயது 41) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இப்பெண், தனது வீட்டுக் கடமைகளை முடித்துவிட்டு வழமை போன்று நேற்று இரவு நித்திரைக்குச் சென்றுள்ளார். எனினும், பொழுது விடிந்த போதும் அவர் தூக்கத்திலிருந்து எழுந்திராமையால் உறவினர்கள் அவரை அவதானித்தபோது அவர் மரணித்திருந்தது தெரியவந்துள்ளது.


சடலம், வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com