தமிழ் அரச ஊழியர்களும் பாலியல் இலஞ்சம் கோருகின்றனர் - சந்திரிக்கா

gfjgjkjlkhjkவட மாகாணத்தில் கணவனை இழந்த பெண்களிடம் இராணுவம் மட்டுமன்றி தமிழ் அரச ஊழியர்களும் பாலியல் இலஞ்சம் கோரும் ஈனச் செயல் தொடர்வதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.



நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஊடகவிலாளர்களை தெளிவூட்டும் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.



அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க...


நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் பொற்காலம் உதயமாகியுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து செயற்படும் இந்த தருணத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படலாம். ஆனால் இன மத ரீதியில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரிவினை, முரண்பாடுகள் மீண்டும் ஏற்படாத வகையில் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும்


.


கடந்த தசாப்தத்தில் முன்னைய அரசாங்கமும் அதிகாரிகளும் இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார். 30 வருடப் போரையும் அதனை ஆரம்பித்த விடுதலை புலிகளையும் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் தோற்கடித்த போதிலும் போராட்டம் ஏற்பட அடிப்படை காரணிகளாக இருந்த பிரச்சினையை தீர்ப்பதற்கும் அது சார்ந்த மக்களின் உரிமைகளை வழங்குவதற்கும் தவறியுள்ளது.



எனவே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற பொறுப்பு புதிய அரசாங்கத்திற்கு இருக்கின்ற காரணத்தால் அதற்கான செயலணி உருவாக்கப்பட்டது. இதற்கான பணிகளை முன்னெடுக்க ஊடகங்களும் ஒத்துழைக்க வேண்டும். நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்க விரும்பம் தெரிவித்துள்ள புலம்பெயர் அமைப்புக்களிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அவர்களின் ஒத்துழைப்பும் எமக்கு அவசியம் என தெரிவித்தார்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com