அரசியல் கைதிகளுக்கு மரணம் தான் விடுதலையா? வவுனியாவில் போராட்டம்

 

 
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா சங்கத்தினரும் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

தொடர் இழப்புகள், வலிகள், ஏமாற்றங்களுக்கு பின்னரும் கூட, தமது உணர்வுகள் மீண்டும் சுயமாகவே சிறைச்சாலைகளுக்குள் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்களின் சிறுநீருடன் குருதியும் கலந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றது. உயிருக்கு ஆபத்தான நிலைமையில் அவர்களின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளின் சப்த நாடிநாளங்களை ஒடுங்கச்செய்கின்றது.

எமது உறவுகளான அவர்களில் யாராவது ஒருவரையேனும் இழக்க நேருமாயின், அது தமிழ் சமுகத்துக்கு பெருத்த அவமானமாகவும், தமிழ் சமுகத்தின் வாக்களிப்பில் நிகழ்ந்த மாபெரும் குறைபாடாகவும், தமிழ் அரசியல் தலைமைகளின் மற்றுமொரு நம்பிக்கைத்துரோகமாகவும் அமையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


தமிழ் மக்களின் உன்னத உணர்வான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி 2016 மார்ச் 08 சர்வதேச பெண்கள் தினமாகிய நாளை, வவுனியா பொங்குதமிழ் 

நினைவுத்தூபி முற்றத்தில் காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரை நடைபெறவுள்ள அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் அனைவரையும் உணர்வுபூர்வமாக 

கலந்துகொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 



 

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com