பாணின் விலையை நாளை திங்கட்கிழமை முதல் 3 அல்லது 5 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரிமா நிறுவனம் கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை 7 ரூபா 20 சதமாக அதிகரித்த நிலையில், நுகர்வோர் வாரத்தை முன்னிட்டு பாணின் விலை கடந்த வாரம் குறைக்கப்பட்டது.
நுகர்வோர் வாரத்தை முன்னிட்டு இடைநிறுத்தப்பட்டிருந்த கோதுமை மாவின் விலையை நாளை முதல் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்கு அமைவாக அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலையையும் 3 அல்லது 5 ரூபாவினால் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் அவற்றின் விலையை அதிகரிக்கும் பட்சத்தில் பாணின் விலை அதிகரிக்கும் எனவும் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment