![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5ajg_FBpJuc9K1SMhYYmitZ5evfvXkZmK_oYAmJTq-78VI3_WzvywLwYW_kboY1_d0nXFHpLKGJETKCF0Uy6SIu8Q6g2L6UIfvA32RyTLuFSOiATDYBkDrLYo3QrGifTea8z785yeSUmT/s200/download.jpg)
கொடுக்கல், வாங்கல் தொடர்பில் விளக்கமளிக்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து 100 பக்கங்களைக் கொண்ட கடிதமொன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச தனது ஆட்சிக் காலத்தின் போது மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்கள், செலவுகள் போன்றவற்றை வெளிப்படுத்துமாறு அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு மாத காலத்திற்குள் பதிலளிக்குமாறு வலியுறுத்தி அனுப்பிவைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த 2005ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு பதவியிலிருந்து வெளியேறிய வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் செலவுகளின் விபரங்களை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் திருமண மற்றும் மரணச்சடங்கு நிகழ்வுகளுக்கு சென்று செலவிட்ட விபரங்கள் மற்றும் கொள்வனவு செய்த மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட விபரங்களுக்கான விளக்கத்தை வழங்குமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
IBC Tamil
0 comments:
Post a Comment