ஜனவரி முதல் குடிவரவு / குடியகல்வுத் திணைக்களம் இடமாற்றம் (passport office)



குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இடமாற்றப்படவுள்ளது என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி நாவின்ன  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது கொழும்பு-10, புஞ்சி பொரல்ல சந்தியில் இயங்கி வரும் இந்த திணைக்களம் பத்தரமுல்லையிலுள்ள செத்சிறிபாய கட்டிடத் தொகுதிக்கே இடமாற்றப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

குறித்த திணைக்களத்தில், சட்டவிரோத நடவடிக்கைகள் இடம் பெறுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண கேள்வியெழுப்பியபோதே  அமைச்சர் நாவின்ன இவ்விடயத்தைத் தெரிவித்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள காவலாளியொருவர், 500 ரூபாய் இலஞ்சம் வாங்கியதை தான்  பார்த்ததாக புத்திக பத்திரண எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

திணைக்களம் செத்சிறிபாயவுக்கு மாற்றப்பட்டதன் பின்னர் இவ்வாறான நடவடிக்கைகளை முற்றிலும் ஒழித்துவிட முடியும் என அமைச்சர் நாவின்ன மேலும் குறிப்பிட்டார்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com