![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUeUHpz7wpwoI7aQPXhK6xWR02231nH7i5rmTN-hdEQHFeNLSBk7KI9r6BdGNem4Hp9Vc97_mxYX-pglUQNjRZsZbOcuk_4VDSyaGTsvIDPmuLKSGfAYh27xt9GQRQq1MI91CZkUXgUA2Y/s200/1.jpg)
உலகமே வியந்தது தமிழீழ அரசின் கட்டமைப்பை பார்த்தது !! கிட்டத்தட்ட 25 வருடங்கள் கடும் யுத்தத்தை சந்தித்த ஈழத்தின் வடக்கு கிழக்கில் அடிப்படை வசதிகளே கட்டமைக்கப்படாத நிலத்தில் சுனாமி அனர்த்தத்தில் புலிகளின் செயல்பாடுகள் உலகநாடுகளை வியப்பாய் பார்க்கவைத்தது..!!
சுனாமி பேரழிவின் போது புலிகளின் செயற்பாடுகள் உலக நாடுகளையே ஆச்சர்யபடவைத்தன.
ஈழப்பகுதிகளில் கோரதாண்டவம் ஆடிய சுனாமியின் சில மணித்தியாலங்களுக்குள் தலைவரின் உத்தரவுகள் பறந்தன…. உடனடியாக புலிகள் மீட்பு நடவடிக்கையை முழு வீச்சில் தொடர்ந்தனர்….
பொதுமக்களிடம் வாகனங்கள் கேட்டு பெறப்பட்டது… தேவாலயங்கள் பாடசாலைகள் உடனடியாக நலன்புரி நிலையங்களாக மாற்றப்பட்டது….
காயமடைந்தவர்களை காப்பாற்ற திலீபன் மருத்துவசேவை இரவு பகலாக போராடியது… மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர்
சுனாமி பாதித்த பிரதேசங்களில் களவுகளை தடுக்க உடனடியாக ஆயுதம் ஏந்திய புலிகள் இறக்கப்பட்டனர்....
சமைத்த உணவுகள் பால்மா பெண்களுக்கான விசேட தேவைகள் காணாமல் போனோரை பற்றி தகவல்களுக்கு உடனடியாக குழுக்கள் அமைக்கப்பட்டது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டது….
இறந்தவர்களை புதைக்க முன்னர் நிழற்படம் எடுக்கப்பட்டு விசேட குறியீடுகளின் அடிப்படையில் தனித்தனியாக புதைக்கப்பட்டனர்..
நாய்கள் பினங்களை தின்பதை தடுப்பதற்க்கு தெருநாய்கள் எல்லாம் பிடித்து ஒரு இடத்தில் அடைக்கப்பட்டது..
வீட்டு நாய்கள் வளர்ப்பவர்களுக்கு கடும் உத்தரவு போடப்பட்டது, சுனாமி ஏற்பட்டு 12 மனித்தியாலத்துக்குள் 300மில்லியன் தலைவரின் நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டது....
புலம்பெயர் தேசங்களில் மருத்துவர்கள் தாதியர்களாக இருப்போரின் உதவி கோரப்பட்டது லண்டன் கனடா ஜெர்மன் நெதர்லாந்து போன்ற இடங்களில் இருந்து பெரும்பாலனவர்கள் சென்றனர்.
தமிழ்நாட்டை விட உயிரிழப்பு அதிகமான ஈழத்தில் புலிகள் இரவு பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்…. தற்காலிக வீடுகளை அமைத்தனர் கடலுக்கு போக யாருக்கும் அனுமதி அளிக்கப்பட இல்லை…
கடலில் சீற்றங்கள் மற்றும் நிகழ்வுகளை கண்காணிக்க விசேட செயற்க்கைகோளின் ( கனடா ) உதவி பெறப்பட்டது....
சிறிலங்க அரசுக்கு முன்பே நவீன சுனாமி கண்கானிப்பு மையம் தமிழ்ச்செல்வனால் திறந்துவைக்கப்பட்டது.... புலிகள் இலங்கை அரசாங்கத்தை விட சிறப்பாய் செயற்பட்டனர்....!!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9O1K6HtBL10LzCkx5whzfnlSbIAhd1eabU4hbMr266AL4SQLpvSN2rAJJuH8bZTmX77qp6pUkcwODGH16hvgVR0WSffAQxy8uVVZhEidRXQrSi99ZDu46Oy8NluBK_jqMD-1Xga9jacIR/s640/1.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVEP3lYj8CmOlp4kWBJmjrKvzzjPyRfbr4NXjSoXtty9-UHmERqRIZBim2vjGRII2PevMiHF1IQqhLxBuDgRfbY8-h30YEkO7EatjaPWMNiCVFjuzdxgTYxNQoOMB76LzK8Z9dLDDgBfnU/s640/2.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw1vLXack83e6sxJVkfQ0_gYxMcgcO3VxWUQzaMv1I3hel2sBeMfCVVWUYpzwhrLUYOICryOzcfBPT_LeCXpjuQ-wNhoyW6Gik0fEEQig1GH2P3qOF00T88RXxo9dK0ODLIKi9KmhpaNW_/s640/3.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2EZwbnB-OUe9JY-mEBjWJ19OU1RS_jyfgkP9_riFLI5PlUx4noHTWt2IU3-m6t5VwKWbTc-_X0Zti4eF7to6j2pZG-YIhjjuy_aQZXghTLDHW0hN844Q-0HabGc8Z3jAkclfLZiOQfxA5/s640/4.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgu1BOercuyLo0oB2vAwQwlWfndd8pjWpcLoc83lrmk5igLAgqwd9h_ZxTZDqXA1w9d1KmNAUDsON4awV0wRIrFjebtw7PX9eGMS1JbbnOnUmLVmajRxtznSOTaW8OaMpC_3ZtKipoFMtM0/s640/5.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbI6zF-UaD_lk5v5cUWv_0QtidBwvp3abLNhSBBy_2uSV4j95xzI2JgAzhT9YUfBxpAaGZ3w9cdn7YvGDhEvxVLt9FbZHpNLIxbkuNgwz-dEzdBWrgMJT7dSkNs7SWGC8Rypo-sMvJefN0/s640/6.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeLgrI3-tiErZf1xZlK06r5l3Ftz06GMnpZx96LvNz4oDpkRhMCC17_ht2t5f-ez629NBra3DrjiDEOr3Yk8vYVftyrMxm9mArQKP-Evm5Bxw9IjP8Wy1S6Q5GSFq0Qs2sfaD9N3kuMZAl/s640/7.jpg)
இணையத்திலிருந்து
0 comments:
Post a Comment