சட்ட வாரத்தை முன்னிட்டு இலவச சட்ட கருத்தரங்கு



வவுனியா பிரதேச செயலகம் ,வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் ,தமிழ் விருட்சம் இணைந்து ஏற்பாடு செய்த இலவச சட்ட கருத்தரங்கு 25.11.2015 வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடை பெற்றது .

வவுனியா பிரதேச செயலாளர் திரு .கா.உதயராசா அவர்களின் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி திரு மு.சிற்றம்பலம் சட்ட சிறப்பு உரையும்,

இடபெயர்வும் ,காணி பிணக்குகளும் என்ற தலைப்பில் சட்டத்தரணி செல்வி எம்,எஸ் .எப் ,சிப்கா அவர்களும் ,

பெண்கள் உரிமையும் ,சட்டமும் என சட்டத்தரணி செல்வி சாமிலா அபூபக்கர் அவர்களும் ,

பிள்ளைகள் உரிமையும் ,சமுதாய பொறுப்பும் ,பெற்றோர் கடமையும் என்ற தலைப்பில் சட்டத்தரணி திருமதி குணவதி அவர்களும் ,

இலவச சட்ட உதவியும் ,பொது மக்களும் என்ற தலைப்பில் சட்டத்தரணி செல்வி தர்சினி அண்ணாதுரை அவர்களும் கருத்துரை வழங்கினார்கள் 

இந்த கருத்தரங்கில் கிராமசேவையாளர்கள் ,கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள் ,மாதர் அபிவிருத்தி சங்க தலைவிகள் உட்பட பலர் கலந்து பயன் அடைந்தனர் .

இந்த கருத்தரங்கு ஏற்பாடுகளை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் )பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலர் திரு மு .விஜயரத்தினம் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தமை குறிப்பிடத்தக்கது .













About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com