அப்பா டாக்ரர் மகள் வழக்கறிஞர் கடிதம் எழுதிவைத்துவிட்டு இருவரும் தற்கொலை

ghkfgkகாரில் அமர்ந்த நிலையில் மகளுடன் திண்டுக்கல்லை சேர்ந்த மயக்கவியல் சிகிச்சை நிபுணர் தற்கொலை செய்து கொண்டார். இவர்கள் எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.



திண்டுக்கல் நகரின் மையப் பகுதியான ஆர்.எம்.காலனியில் ஒரு காரில் இருவர் அமர்ந்திருந்த நிலையில் நீண்டநேரம் இருந்தது தெரிந்தது. இதுகுறித்து அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.



இதைத் தொடர்ந்து திண்டுக்கல் நகர் மேற்கு இன்ஸ்பெக்டர் வைரம் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். காரில் அமர்ந்திருந்த நிலையில் இருவர் இறந்து கிடந்தது தெரிந்தது. காருக்குள் கடிதம் ஒன்றும் இருந்துள்ளது. விசாரணையில் இறந்தவர்கள் டாக்டர் சோமசுந்தரம், அவரது மகள் வழக்கறிஞர் வானதி என்றும் தெரியவந்தது.



திண்டுக்கல் அருகே நந்தவனப் பட்டியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற டாக்டர் சோமசுந்தரம்(62). மயக்கவியல் சிகிச்சை நிபுணர். இவரது 2-வது மகள் வழக்கறிஞர் வானதி(27). இவருக்கும் மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திகேயனுக்கும் திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன.



இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த இரு மாதங்களாக கணவரைப் பிரிந்து தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.



நேற்று முன்தினம் தனது சகோதரியின் குழந்தைக்கு பழநியில் நடைபெற்ற முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிக்கு தந்தையும், மகளும் சென்று வந்தனர். மகளின் குடும்ப வாழ்க்கை பாதித்த நிலையில் தந்தை மனஉளைச்சலில் இருந்துள்ளதாகத் தெரிகிறது.


இந்நிலையில் அதே நாளில் இரவு தந்தையும், மகளும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து காரில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளனர்.



சோமசுந்தரத்தின் மனைவி தங்க உமாவை (55) வீட்டில் விட்டு விட்டு சென்றுள்ளனர். நேராக திண்டுக்கல் ஆர்.எம். காலனி பகுதிக்கு வந்து காரில் அமர்ந்து, மயக்க மருந்து ஊசி செலுத்தி இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காரில் இவர்கள் எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றி, அதன் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.



திண்டுக்கல் நகர் மேற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே ஆன நிலையில் வானதியின் இறப்பு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com