இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்குஇடையில் கைச்சாத்திடப்பட இருக்கும் ETCA உடன்படிக்கைக்கு எதிராக கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் பாரிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை ஒன்றிணைந்த தொழில் சார் சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்தன.
ETCA உடன்படிக்கையினால் இலங்கை மக்களுக்கு தொழில் வாய்ப்பு குறையும் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், இந்தியாவில் இருப்பவர்களை குறைந்த சம்பளத்தில் இலங்கையில் தொழிலில் அமர்த்த முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த உடன்படிக்கையில் இலங்கை அரசு கைச்சாத்திட்டால் அது பாரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும் எனவும் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment