பொன்சேகா மனம் திறந்து விட்டார் – உண்மைகள் இன்னும் வெளிவரும்!

imagesஅமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்து பகிர்வுகள் ஒரு ஆரம்பம் மட்டும்தான். இதன் தொடர்ச்சியாக பல்வேறு புதுப்புது உண்மைகளும், திடுக்கிடும் சம்பவங்களும் நடைபெறும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.



யுத்த குற்றம் குறித்து நாம் சொன்னால் இட்டுக்கட்டிய புனைக்கதை. அதையே அவர் சொல்லும்போது அது உண்மைகளை புட்டு, புட்டு வைக்கும் வாக்குமூலம் என்பதை உலகம் புரிந்துகொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.



கொழும்பு புனித அந்தோனியார் ஆண்கள் கல்லூரி விளையாட்டு விழாவில் கலந்துக்கொண்டு பெற்றோர் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு கூறியுள்ளார்.



இது குறித்து அமைச்சர் மனோ கணேசனின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.



அந்த அறிக்கையில்  மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-



நமது கொழும்பு மாவட்ட மக்கள சார்பாக இன்று பாராளுமன்றத்திலும், மாகாணசபையிலும், மாநகரசபையிலும், நகரசபையிலும் இருப்பது நமது கட்சி மட்டுமே. வெறும் ஓட்டை உடைசல்கள் நம்மை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது.



எங்கள் பத்து வருட போராட்ட பணிகளின் காரணமாக மஹிந்த அரசு வீழ்ச்சியடையும் சூழல் உருவான பின் பலர் எங்களோடு இணைந்து இந்த அரசு உருவாக்கத்துக்கு ஒத்துழைத்தார்கள்.



இன்னமும் சிலர் மஹிந்தவுடன் இருந்துவிட்டு நாங்கள் இந்த அரசை உருவாக்கிய பின் எங்களுடன் வந்து இணைந்துக்கொண்டார்கள். இன்னும் சிலர் இன்னமும் மஹிந்தவுடன் குடித்தனம் செய்கிறார்கள். இவர்களை மக்கள் அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும். இந்த அரசை உருவாக்கிய முதல் ஐந்து பேரில் நானும் ஒருவன். நாங்கள் கடந்த பத்து வருடங்களுக்கு மேல் பட்ட படும்பாட்டின் பிரதிபலன்தான் இந்த அரசாங்கம்.



இன்று இந்த அரசை உருவாக்கி, மஹிந்த கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பியதில் மாத்திரம் நின்று விடாமல் யுத்தம் நடத்திய இராணுவ தளபதியின் வாயின் மூலமாகவே உண்மைகளை எங்கள் அரசு வெளியே கொண்டு வருகிறது.



யுத்தத்தை தலைமை தாங்கி நடத்தியதில் தனக்கு உள்ள நியாயமான பெருமையை கோரும் அவர், அந்த யுத்தத்தின் போது தனது கட்டுப்பாட்டையும், அதிகாரத்தையும் மீறி நடந்த மானிட உரிமை மீறல்களையும், அதனால் முழு நாட்டுக்கும், முழு இராணுவத்துக்கும் ஏற்பட்டுள்ள அபகீர்த்தியையும் பற்றி மனந்திறந்து சொல்லுகிறார். உலகம் கேட்க தொடங்கியுள்ளது.’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com