காதலிக்கு உங்கள் மீது சந்தேகம் வலுத்து வருகிறது என்பதை வெளிகாட்டும் 7 அறிகுறிகள்!

nnகாதலில் பெண்கள் தங்கள் துணை மீது பேரார்வம் கொண்டிருப்பார்கள். இது சில  சமயங்களில் சந்தேகப் படுகிறார், வீண் சண்டையிடுகிறார், நம்பிக்கை இல்லை அவளுக்கு, சுதந்திரத்தை பறிக்கிறார் போன்ற எண்ணங்களை உண்டாக்கலாம். ஆனால், இது 50:50 தான்.



இதனால் அவர்கள் உங்கள் மீது பொறாமை கொள்கிறார், சந்தேகப்படுகிறார் என்றும் சொல்ல முடியும். சில சமயங்களில் அது அவர்களது முதிர்ச்சியின்மை, குழந்தைத்தனத்தையும் கூட வெளிக்காட்டலாம். இரண்டில் உங்கள் காதலி எந்த வகையை சேர்ந்தவர் என்பதை நீங்கள் தான் கண்டறிய வேண்டும்….



அறிகுறி 1
அவர் உங்களுடன் இருக்கும் போது நீங்கள் வேறு பெண்ணுடன் பேசும் போது அசௌகரியமாக உணர்வது.



அறிகுறி 2
உங்களை தனிமையில் விட மறுப்பது. நீங்கள் எங்கு சென்றாலும், தானும் உன்னுடன் வருகிறேன் என்று கூறுவது.



அறிகுறி 3
உங்கள் முகநூல் முகப்பு படத்தை யார் யாரெல்லாம் லைக் செய்துள்ளனர், மற்ற பெண்கள் என்ன கமெண்ட் செய்துள்ளனர் என வேவு பார்ப்பது.


 

அறிகுறி 4
அவர் உடன் இருக்கும் போது மட்டுமில்லாமல், அவர் கால் செய்யும் போது நீங்கள் பிஸியாக இருந்தாலும் கூட, யாருடன் பேசினீர்கள், எதற்காக என பேரார்வம் கொண்டு கேட்பார்கள்.



அறிகுறி 5
காரணமே இன்றி சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சண்டையிடுவார்கள். இதனால், உறவில் சந்தேகம் வலுக்க ஆரம்பிக்கும்.



அறிகுறி 6
முதல் ரிங்கில் கால் அட்டன்ட் செய்யாமல் போனாலோ, குறுஞ்செய்திக்கு உடனே ரிப்ளை செய்யாமல் போனாலோ யாருடன் கடலை போட்டுக் கொண்டிருந்தாய் என கேட்பது.



அறிகுறி 7
நீங்கள் இல்லாத போது உங்கள் மொபிலை எடுத்து உளவுத்துறை வேலை பார்ப்பது போன்றவற்றில் ஈடுபடுவது.


 

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com