பிள்ளையானுக்கு விளக்கமறியல் ஏப்ரல் 1ம் திகதி வரை நீடிப்பு

asகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிபதி உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற நத்தார் ஆராதனையின் போது கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.


இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக கடந்த ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து


வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிள்ளையானின் பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com