போராளிகள் மற்றும் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு - வவுனியா மாவட்டத்தில்

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் திட்டத்தின் கீழ், வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட வாழ்வாதார செயற்றிட்டத்தில் இரண்டாம் கட்ட நிகழ்வாக திணைக்களத்தால் தெரிவுசெய்யப்பட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் யுத்தத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கான, வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 147 பயனாளிகளுக்கான ஒவ்வொருவருக்கும் தலா ஐம்பது ஆயிரம் பெறுமதியான (50,000/-) உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு 11-12-2015 வெள்ளி காலை 10:30 மணியளவில் வவுனியா கிராம அபிவிருத்தி திணைக்கள மண்டபத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்விற்கு வவுனியா அந்தோனியார் ஆலய உதவி பங்குத்தந்தை அவர்களும் வவுனியா இந்து ஆலய குருக்கள் அவர்களும் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் அவர்களும் வவுனியா மாவட்ட அமைச்சரின் இணைப்பாளர் திரு.செந்தில்நாதன் மயூரன் அவர்களும் மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு பொருட்களை வழங்கி வைத்தனர்.




About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com