வத்­தளை கொலை தொடர்பில் நால்வர் பொலி­ஸாரால் கைது


வத்­தளை, மாபோலை பிர­தே­சத்தைச் சேர்ந்த கோழி இறைச்­சிக்­கடை ஒன்றின் உரி­மை­யாளர் வெட்டிக் கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பில் சந்­தேக நபர்கள் நால்வர் நேற்று இரவு பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
வத்­தளை பொலிஸார் முன்­னெ­டுத்த விஷேட விசா­ர­ணை­க­ளி­லேயே நேற்று இவர்கள் நால்­வரும் சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் குறிப்­பிட்­டது. தனது 18 வயது மக­னுடன் வணக்­கஸ்­த­லத்­திற்கு சென்று முச்­சக்­க­ர­வண்­டியில் திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­வேளை 46 வய­தான மொஹம்மட் என அறி­யப்­படும் கோழிக் கடை உரி­மை­யாளர் நேற்று அதி­காலை கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார்.
சடலம் பிரேத பரி­சோ­த­னைக்­காக ராகம வைத்­தி­ய­சா­லையில் வைக்­கப்­பட்­டுள்­ளது. சம்­பவம் தொடர்பில் வத்­தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித் துள்ளது.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com