அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்றைய தினம் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்க உள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய சர்ச்சைக்குரிய உரையே இந்த ராஜினாமாவிற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.மாகாணசபைகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக ஜனக பண்டார தென்னக்கோன் கடமையாற்றி வருகின்றார். ஜனாதிபதியின் உரைக்கு எதிராக ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை கூட்டி ஜனக பண்டார தென்னக்கோன் கருத்து வெளியிட்டிருந்தார்.
அதேபோன்று இன்றைய தினமும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை கூட்டி பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment